Concluding remarks of Dr G Ravindran on Antonio Gramsci and Bakhtin on the second day of the two day seminar on Bakhtin and Gramsci by Prof.Craig Brandist on April 16-17 2014 at the Thanthai Periyar Hall, University of Madras
We should thank Prof.Craig for a very different classical approach. He provided a huge context, but used only a few slides. He succeeded in contextualising how Gramsci’s thoughts were influenced by this huge canvas of Russian thoughts. As before, as in yesterday’s session,what I like most in Prof.Craig’s approach is his cautious approach.He is a scholar who wants to be cautious about the main “sacred objects”. According to Prof.Craig we should not misread what gave birth to these “sacred objects” We need not forget the history of these “sacred objects”, that is to say, what caused Bakhtin to emerge and what caused Gramsci to emerge.
அந்த அளவில் இந்த இரண்டு நாள் அமர்வுகள், பக்தின் பற்றியும், கிராம்சி பற்றியும் ஒரு புதிய பரிமாணத்தில் நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றன. இரண்டாவது முக்கியமான விடயம், பேராசிரியரின் உரைகளில் அவர் எடுத்துக் கொண்ட இந்த தலைப்புகளையும் மீறி அவர் புதியதாக பல புதிய அறிஞர்களை அவர்களது பரிமாணங்களை அறிமுகப்படுத்திய பாணி வியப்புக்குறியது. இன்றையு அமர்வில், கிராம்சியினுடையு பண்பாட்டு மேலாதிக்கம் சார்ந்த கருத்தியல் பார்வைகள் எவ்வாறு ரஷ்ய அறிஞர்களால் விதைக்கப்படுகிறது என்று பேசும் பொழுது அவர் முதலில் குறிப்பிட்ட ஒரு முக்கியமான அறிஞர், பார்ட்டோலி . ரஷ்யாவில் 19வது நூற்றாண்டில் இயங்கிய மொழியியல் அறிஞர். இவர் ஆய்ந்தது எவ்வாறு மொழி சார்ந்த innovations ஒரு கூட்டத்திலிருந்து இன்னோரு கூட்டத்திற்கு போகிறது when conflicts between national languages and minority languages happen.இதை ஒரு முக்கியமான விடயமாக பார்ட்டோலி பார்த்தார் என்று பேராசிரியர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவில் கடந்த காலத்தில், முக்கியமாக 1905ல் நடந்த வரலாற்று சம்பவத்தை நாம் மறக்கலாகது என்று பேராசிரியர் கிரேய்க் குறிப்பிட்டார். முதல் முறையாக ஒரு ஆசிய நாடு (சப்பான்) ஒரு அய்ரோப்பிய நாட்டை (ரஷ்யா) போரில் தோற்கடிக்கும் நிலை ரஷ்யாவில் பல பாதிப்புகளை எற்படுத்துகிறது. டராட்ஸ்கி புதிய கருத்தாக்கத்தை வைக்கிறார். அக்டோபர் புரட்சி நடக்கிறது. இந்த புரட்சியாளர்கள் எவ்வாறு முன்று குழுக்களாக பிரிந்து தங்கள் வாத, பிரதி வாதங்களை வைக்கிறார்கள் என்று பேராசிரியர் கிரேய்க் சொன்னார். அப்புறம், போல்ஷ்விக் என்று அழைக்கபட்ட கூட்டத்தினருக்கும், மென்ஷிவிக் என்று அழைக்கப்ட்ட கூட்டத்தினருக்கும் இடையே நடந்த மோதலைப் பற்றி குறிப்பிட்டார். இதன் ஊடே, புரட்சியின் முக்கியமான கதாநாயகனான லெனின் எவ்வாறு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மேல் குறிப்பிட்ட பண்பாட்டு மேலாதிக்க சிந்தனையை தெளிவுப்படுத்துகிறார் என்றும் கூறுகிறார். அவர் லெனின் சொன்ன அந்த வார்த்தைகளை நீண்ட மேற்கோளாக காட்டிய விடயம் உங்களுக்கு நினைவிருக்கும். இந்த மேற்கோள் liberalism என்ற விடயத்தை லெனின் எவ்வாறு பார்த்தார் என்பதை சுட்டுவது. இரண்டாவதாக, அவர் குறிப்பிட்ட முக்கியமான நபர், பாக்தேனேவ். பாக்தேனேவ் குறிப்பிட்ட மொழி சார்ந்த விடயம் பேராசிரியரால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மொழி சார்ந்த விடயம் எவ்வாறு உற்பத்தி தளங்களின் மூலதனமாக ஆகிறது என்று பாக்தேனேவ் பார்த்ததாக கிரேய்க் குறிப்பிட்டார். Proletariatம், bourgeioisம் எவ்வாறு இதை வேறு விதமாக பார்க்கிறார்கள் என்பது பாக்தேனேவ் பார்வையில் புதிய கருத்தாக்கமாக உருமாறுகிறது. உதாரணத்திற்கு. பூஷ்வாக்கள் இதை ஒரு commodity exchange பார்வையில் பார்க்கிறார்கள். Proletariat இதை வேறு விதமாக பார்க்கிறார்கள் என்றார் பாக்தேனேவ்.
இவற்றை எல்லாவற்றையும் விட, எது விஞ்சி நிற்கிறது என்றால் பாக்தேனேவின் hegemony சார்ந்த பார்வை.. இது கிராம்சி பின்னாளில் கையிலேடுத்த, செம்மைப்படுத்திய, செப்பனிட்ட ஒரு முக்கியமான கருத்தியல் தளம், அதனுடைய ஆழமான வேர் ரஷ்யாவில் விதைக்கப்பட்டது என்பது பலருக்கு தெரியாது. Hegemony பற்றி பல அறிஞர்கள், பல்வேறு தளங்களில் பேசிக் கொண்டு வரும் பொழுது, புக்காரின் என்ற அறிஞர் வெகுவாக அடுத்த கட்டத்திற்கு இதைக் கொண்டு போனதாக பேராசிரியர் சொன்னார். அந்த பண்பாட்டு மேலாதிக்கத்தை எவ்வாறு நாம் பார்க்கலாம் என்று புக்காரின் தெளிவாக, 1920களில் குறிப்பிட்டதாக பேராசிரியர் கூறினார். அதே கால அளவில், லெனின் மறைந்துப் போகிறார், அதாவது 1924ல். 1925ல் சோவியத் நாட்டின் பொதுவுடமை கட்சி புதிய பொருளாதரக் கொள்கையை அறிவிக்கிறது. அப்பொழுது, முதலாம் உலகப் போரினால் எற்பட்ட விளைவுகளுக்கு பதிலாக அவர்கள் limited, regulated market economyஜ அறிமுகப்படுத்துகிறார்கள். அப்பொழுது ஒரு முரணான நிலை எடுக்கப்படுகிறது. அதாவது, தேசிய மொழி எதுவாக இருக்கலாம், சிறுபான்மையினர் மொழி எந்த தளத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை அது. தேசிய மொழியை எவ்வாறு வளர்த்தேடுக்கலாம் என்பது பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை அவர்களுக்கு வருகிறது. அவர்கள் அப்பொழுது வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். இந்தியப் பார்வையில் இருந்து பார்த்தால், அது வித்தியாசமாக இருக்கும். 1960களில் நடந்த மொழிப் போர் எவ்வாறு இந்தியாவில், தமிழ் நாட்டில் பார்க்கப்பட்டது என்பதை நண்பர்கள் அறிவீர்கள். ஆனால், 1920களில் ரஷ்யாவில் இந்த மொழி சார்ந்த விடயத்தை வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார்கள். இதை மேலாதிக்கப் பார்வையில் அவர்கள் எவ்வாறு பார்த்தார்கள் என்றால், “நாம் எடுத்த உடனே ரஷ்ய மொழியை national languageஆக அறிவிக்க கூடாது. முதலில் நாம் இதை மறுக்க வேண்டும். ரஷ்ய மொழி தேசிய மொழி என்பதை மறுக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், நாம் சிறுபான்மை மொழிகளை வளர்த்தேடுக்க வேண்டும். ஒரு கால அளவிற்கு பிறகு, இந்த எல்லா மொழிக் கூட்டத்தினர்களும் ஒரு சம அளவிற்கு வரும் நிலையில் அவர்களாகவே ரஷ்ய மொழியை தேசிய மொழியாக எற்றுக் கொள்வார்கள்“. அந்த காலத்தில் ரஷ்யாவில் பண்பாட்டு மேலாதிக்க சிந்தனை எவ்வாறு மொழி சார்ந்து இயங்கியது என்பதை இவ்வாறு பேராசிரியர் சுட்டிக் காட்டினார்.
பல அளவுகளில், இந்த காலக் கட்டத்தில், ரஷ்யாவில் இயங்கிய அறிஞர்கள் பின்னாளில் எழுந்த முக்கியமான விவாதப் பொருட்களுக்கு காரணக்கர்த்தாக்களாக இருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டும் பொழுது, பேராசிரியர் கிரேய்க் எட்வர்ட் செய்துனுடைய கருத்தாக்கமான orientalism எவ்வாறு இங்கு விதைக்கப்படுகிறது என்று சொன்னார். நீங்களேல்லாம் எட்வர்ட் செய்துனுடைய Orientalism என்ற நூலை வாசித்திருப்பிர்கள். இந்த நூலுக்கான அடித்தளமும் ரஷ்யாவில்தான் விதைக்கப்படுகிறது. நிக்கோலாய் மார் என்ற மொழியியல் அறிஞர் இந்திய சார்ந்த மேற்கத்திய பார்வைகளை ஒரு கருத்தியல் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். பின்னாளில், இந்த விடயத்தை செய்த் தனது படைப்பில் புகுத்தினார் என்பதையும் பேராசிரியர் விளக்கினார். இதில் நீங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியது, நேற்று அவர் சொன்ன முக்கியமான வாசகத்தைதான் இன்றும் அவர் சொல்லாமல் சொன்னார். அதாவது “பக்தின் ஒரு original thinker இல்லை”. அதுதான் நேற்று நமக்கு புலப்பட்ட விடயம். அதே மாதிரி, “கிராம்சியும் ஒரு original thinker இல்லை”. அவர்கள் original thinkersகளாக இயங்கியிருக்கலாம், ஆனால், அவர்களின் பின்புலத்தில் வரலாறு சார்ந்த காரணிகளாக இயங்கிய இந்த முக்கியமான நபர்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பேராசிரியர். கிராம்சியைப் பற்றி நினைக்கும் பொழுதும், அவரைப் பற்றி புரிந்து கொள்ள நினைக்கும் பொழுதும், பக்தினைப் பற்றி நினைக்கும் பொழுதும், அவர்கள் பின்னால் இருக்க கூடிய நீண்ட நெடிய பாரம்பரிம் சார்ந்த அறிவு தேடலை, பல அறிஞர்கள், பல தளங்களில், பல வரலாற்று நிகழ்வுகள் சார்ந்து அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கினார். இந்த அளவில் எனது மொழியாக்க உரையை முடித்துக் கொள்கிறேன்.